இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதியம் மறையுமா? - 7

சாதியம் மறையுமா? - 7 அம்பேத்காரின் மதமாற்ற முடிவு 1935 அக்டோபர் 13ல் இயோலாவில் நடந்த மாபெரும் மாநாட்டில் அம்பேத்கர் 'நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், நிச்சயமாக ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்’ என அம்பேத்கர் முழங்கியதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். 'தான் எவ்வளவுதான் இந்துமதத்தில் இருந்துகொண்டு போராடினாலும், இந்த உயர்சாதி மக்கள் திருந்தப்போவதில்லை. தீண்டாமைக் கொடுமை ஒழியப்போவதில்லை. இந்து மதத்தில் இருக்கும்வரை என் மக்கள் தீண்டப்படாதவர்களாகவேதான் வாழப் போகிறார்கள்; சாகப்போகிறார்கள். தீண்டாமை அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கத் தன்னை நம்பியிருக்கும் இந்த மக்களைக் கண்டிப்பாக விடுவித்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதுதான் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வந்திருந்தார். அம்பேத்கரின் இந்த அறிவிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அறிவிப்பு. அது நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத...

சாதியம் மறையுமா? - 6

சாதியம் மறையுமா? - 6  மகாத்மா காந்தியின்  ஆரம்ப கால கருத்துக்கள்  1920ல் காந்தி ”சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது எனவும்,   நால்வருணம் என்ற பிரிவினை அடிப்படையானது, இயல்பானது, தேவையானது எனவும், ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது எனவும்,  பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது எனவும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் எனவும், சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன எனவும்,  சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை எனவும்,  அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது எனவும்,  ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது எனவும், ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது எனவும், அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூக அடுக்கு உ...

சாதியம் மறையுமா? - 5

சாதியம்  மறையுமா? - 5 காந்தியும் சாதியும் மகாத்மா காந்தி அவர்கள் சாதிகள் சம்பந்தமாக கொண்டிருந்த நிலைப்பாட்டை பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இயன்ற அளவிற்கு நான் இங்கு சுருக்கி வழங்குகிறேன்:  காந்தியின் தனித்தன்மை 'காந்தியின் மனம் என்பது ஒரு நவீன மேற்கத்திய மனம். கிட்டத்தட்ட ஓர் அறிவியலறிஞனின் மனம். காந்தி எல்லாவற்றையும் ‘சோதனை- விளைவுகளை அவதானித்தல்- பிழை திருத்தல்- மீண்டும் முயல்தல்’ என்ற தூய அறிவியல் நோக்கிலேயே செய்தார். இந்திய விடுதலைப்போராட்டம் முதல் தன் சொந்த மலக்குடலை சுத்தம்செய்வதுவரை. காந்தி எப்போதும் எதையும் நடைமுறை சார்ந்துதான் புரிந்துகொள்ள முயன்றார். அவரே இந்திய கிராமங்கள் தோறும் அலைந்தார். மக்களின் வாழ்க்கையை அவரே கண்டார். அந்த வேறுபாடு அவரை பிற காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் இருந்து பிரித்தது. அவர்கள் கட்சி ,அமைப்பு சார்ந்து பயணம் செய்திருப்பார்களே ஒழிய மக்களிடையே கருத்தறிய சென்றவர்கள் அல்ல. அக்கால இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகளில் உள்ளூர வெள்ளையன்மீது தாழ்வுணர்ச்சி இல்லாத ஒரே மனிதரும் அவர்தான்....

சாதியம் மறையுமா? - 4

சாதியம் மறையுமா? - 4 மகாத்மா காந்தியின்  வாழ்க்கை வரலாறு மகாத்மா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று...

சாதியம் மறையுமா? - 3

சாதியம் மறையுமா? - 3 சாதி ஒழிப்பு பற்றி பேசுகின்ற போது தனது வாழ்நாள் முழுவதும் அதற்காக தணியாத கனலாக, தளராத வீரனாக போராடிய பீமாராவ் அண்ணல் அம்பேத்கரை பற்றி கூறாமல் யாரும் எதனையும் கூறிவிட இயலாது. அண்ணல் அம்பேத்கரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி எல்லோரும் அறிவார்கள். அவரைப் பற்றி நான் கூறி அறிய வேண்டிய அவசியம் இல்லை தான். இருப்பினும் இந்த தொடரின் நோக்கத்திற்காக, விக்கிப்பீடியாவில் அவரைப்பற்றி கூறியுள்ளதிலிருந்து அவரின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு சுருக்கி தர விரும்புகின்றேன். இது அவரின் உணர்வுகளுக்கும் செயல்களுக்குமான காரணங்களையும், அவரின் போராட்டத்திற்கான பின்னணியையும் ஓரளவு உணரச் செய்யும் என்று நம்புகின்றேன். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அம்பேத்கர்  1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அவரின் தந்தை இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் ...

சாதியம் மறையுமா? - 2

சாதியம் மறையுமா? - 2 'ஆதியில் இல்லை சாதி! பாதியில் வந்தது சாதி! இன்னும் இருப்பது என்ன நீதி! எப்போது மறையும் இல்லாமல் மீதி!' என்று ஒரு கவிதை. சாதி எப்போது வந்தது என்பது பற்றி நிறைய சர்ச்சை உள்ளது. மனிதகுல வரலாற்றை பற்றி பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நூல்களை படிக்கின்ற போது மனிதர்கள் எங்கெங்கு தோன்றினார்களோ அங்கங்கே கூட்டமாக வாழ்ந்தார்கள் எனவும், உணவு தண்ணீர் போன்றவற்றுக்காக ஒரு கூட்டம் இன்னொரு இடத்திற்கு இடப்பெயர்வு செய்கின்றபோது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு கூட்டத்துடன் சண்டையிட்டு வென்று அந்த இடத்தை ஆக்கிரமித்து ஏற்கனவே இருந்த கூட்டத்தை அடிமையாக்கியோ,  அல்லது வெல்லமுடியாத சமயத்தில், சமாதானமாக போய் அங்கிருந்து கூட்டத்தோடு ஒன்றுபட்டோ வாழ்ந்திருக்க கூடும் எனவும்,  வேட்டையாடிய சமுதாயம் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் சிறுசிறு தொழில்களையும் கற்றுக்கொண்ட பிறகு கால்நடைகளும் நிலங்களும் உற்பத்திப் பொருட்களும் அவரவர் தனிச் சொத்துக்களான பிறகு குடும்பங்களும், பல குடும்பங்களை கொண்ட குடிகளும், குலங்களும் தோன்றியிருக்கக்கூடும் எனவும் தெரிய வருகின்றன. ஒவ்வொரு குடியும் ஒரு தொழிலைத் தொடர்...

சாதியம் மறையுமா? -1

சாதியம் மறையுமா? -1 'எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள்! எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்!' எனவும்,  'சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.' எனவும் பாடியுள்ளார் மகாகவி பாரதி.  ஆனால், சாதிய ஒழிப்பு குரல் நீண்டகாலமாக இந்திய மண்ணில் ஒலித்துக்கொண்டு உள்ளபோதிலும், சாதியம் மக்கி மறைந்து விட்டதாக கருத இயலவில்லை. மேலோட்டமாக சற்று மறைந்து விட்டது போல் தோன்றுகின்ற போதிலும், உள்ளூர மேலும் மேலும் திடமாகி வருவதாக தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் என்ன? அதனை மக்கி மறைய செய்வதற்கு வழிகள் உண்டா? என்று ஆராய முற்படும்போது, சாதியம் என்பது தானாக வந்ததா, அல்லது தோற்றுவிக்கப்பட்டதா, இந்தியாவின் இரண்டு மாபெரும் ஆளுமைகளாக இருந்த மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் சாதிய பிரச்சனையில் எவ்வாறு முரண்பட்டு இருந்தனர்; காலப்போக்கில் அவர்கள் எந்த அளவிற்கு இதில் ஒன்று பட்டனர், சாதியை ஒழிப்பதற்கு அவர...

வேதாத்திரியம் என்கின்ற வேதம் 7

வேதாத்திரியம் என்கின்ற வேதம் 7 6. மதிப்புமிக்க மகளிர் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் மகளிர் மதிப்பு குறித்து கூறியுள்ள நெறிமுறையை தற்போது பார்ப்போம். வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை: எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்? பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன், பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் இதைவிட பெருமை வேறென்ன எடுத்துச் சொல்வதற்கு. விளக்கம்: எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை அற்புதமாய் வடிவமைத்துள்ளான். வாழுகின்ற மக்களில் இவ்வுண்மை  அறிந்தோர் எத்தனை பேர்? பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன். பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பு தான்  என்பதைவிட பெண்ணிற்கு பெருமை சேர்க்க எடுத்துச் சொல்ல வேறு என்ன உள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள். பெண்மையின் சிறப்பினை அன்றுதொட்டு இன்றுவரை பலர் எடுத்துரைத்தாலும்...

வேதாத்திரியம் என்கின்ற வேதம்: 6

வேதாத்திரியம் என்கின்ற வேதம்: 6  5. இறை விளக்கம் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் இறைவன் பற்றி கூறியுள்ள பல நெறிமுறைகளை இன்று இங்கே ஒருங்கே காண்போம்:  வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:  இறைநிலை என்ற பேராற்றல் எங்கும் உள்ளது நீக்கமற; மறைவாய் இருந்து அது ஆற்றும் மாபெரும் செயலை நினைத்திடுவோம்; உணவை உண்போம் நாள்தோறும் உடலாய் அதனை மாற்றுவது யார்? கணமும் நம்மைப் பிரியாமல் கருத்தாய் இருந்து ஊக்குவது யார்? உலகம், நிலவு, சூரியன்கள், உயிர்களனைத்தும் படைத்தது யார்? பலவும் ஒழுங்காய் முறைபிறழா பாங்கில் இயக்கி வருவது யார்? அவரே தெய்வம், பேராற்றல் அறிவைக் கொண்டே வணங்கிடுவோம். விளக்கம்:  இறைவன் என்ற பேராற்றல் எங்கும்  நீக்கமற மறைவாய் இருந்து மாபெரும் செயல் ஆற்றி வருகிறது. உண்ணும் உணவை நாள்தோறும் உடலாய் மாற்றுவது யார்? கணமும் நம்மைப் பிரியாமல் கருத்தாய் இருந்து காப்பது யார்? உலகம், நிலவு, சூரியன்கள், உயிர்களனைத்தும் படைத்தது யார்? பலவும் ஒழுங்காய் முறைபிறழா பாங்கில் இயக்கி வருவது யார்? அவரே தெய்வம், பேராற்றல். அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் இறை சக்தி உள்ளது என்ற தெளிவே ...

வேதாத்திரியம் என்கின்ற வேதம் - 5

வேதாத்திரியம் என்கின்ற வேதம் - 5 4. நிலவுலகுக்கோர் ஆட்சி: வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் நான்காவது நெறிமுறை நிலவுலகுக்கோர் ஆட்சி என்பதாகும். அதுபற்றி அவர் கூறும் கவிதையையும் அதன் பொருளையும் இனி காண்போம்: ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம் பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம் சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு தெய்வநிலை யகத்துணரும் இறைவணக்கம் நேர் வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும் நெறிமுறைகள் இவையிணைந்த வாழ்வு காண்போம். ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவிற்கு பாடம் சொன்னார் மகாகவி பாரதியார். வளர்ந்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பாப்பாவிற்கு பாடம் சொன்னார் மகாகவி பாரதியார்.  மகரிஷி ஐயா அவர்களும் அன்புள்ள ஆட்சிக்கு குழந்தைகளை ஒழுக்கத்தோடு வளர்ப்பது தான் அடிப்படை என்பதை ஆய்ந்து உணர்ந்து கூறியுள்ளார். பார் முழுவதும் சமத்துவமும் நேர்மையும் நீதியும் கொண்ட பொருளாதார முறை ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்த பொருளாதார முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றார். எல்லோரும் சிக...

வேதாத்திரியம் எனும் வேதம் - 4

வேதாத்திரியம் எனும் வேதம் - 4  3. நேர்மையான நீதிமுறை: நீதி நெறிமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் பின்வரும் கவிதையில் சொல்லுகிறார்: கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து! கொல்லப்பட்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்! கொலைக்கு கொலை நீதியென்றும் குற்றம் செய்த கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால் கொலையுண்டோர் மனைவி மக்கள் பெற்றோர் செய்த குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே கொலையுண்ட நிகழ்ச்சி அன்னார் வாழ்வில் என்றும் கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே? அறிவிழந்து ஒருவன் கொலை செய்தால், அதற்கு நீதிபதி அளித்த தண்டனையால் அவன் கொல்லப்பட்டால் அவனுக்கும் நீதிபதிக்கும் என்ன வேறுபாடு?  ஒருவன் அறிவிழந்து செய்யும் செயலுக்கு ஒரு நீதிபதி அதையே தண்டனையாக அறிவோடு தருவது முறைதானா என்று வினா எழுப்புகிறார் ஐயா! அப்படி அவன் கொல்லப்படுவதால் அவனது பெற்றோர் மனைவி மக்கள் ஆதரவற்று துன்பம் அடைவார்கள் அல்லவா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்களுக்கு இந்த துன்பம் அவசியமா? ஒருவன் அறிவிழந்து செய்யும் செயலுக்காக அவரின் குடும்பத்தாரை துன்பத்தில் தள்ளுவது முறைதானா? இ...

வேதாத்திரியம் என்ற வேதம் - 3

வேதாத்திரியம் என்ற வேதம் - 3 2. பொருள் துறையில் சமநீதி பொருளியல் துறையில் சமநீதி ஏற்படுவதற்கு வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் இயற்றியுள்ள கவிதையையும் கருத்தையும் தற்போது காண்போம்: வீடு தொழிற்சாலை விளைநிலம் வியாபாரம் விஞ்ஞான இயந்திரங்கள் ஆட்சி பீடம் பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக பலபடியில் கூட்டுறவு முறை வகுத்து நாடு வளம் பெற்றுலகத் திணைப்பைக் கொண்டு நல் வாழ்வு கிட்டுவதற்கு ஏற்றவாறு ஈடு இணையற்ற ஒரு திட்டம் வேண்டும் இம் முறையே மக்களுக்கு நலம் பயக்கும். வீடு, தொழிற்சாலை, விளைநிலம், வியாபாரம், விஞ்ஞான இயந்திரங்கள், ஆட்சி பீடம், பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக வேண்டும் என்கிறார் மகரிஷி அய்யா அவர்கள். தனியுடைமை முழுமையாக நீக்கப்பட்டு பொதுவுடமை ஏற்பட வேண்டும் என்பதை ஐயா குறிப்பிடுகின்றார். ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி ஐயா அவர்கள் இந்த இடத்தில் விரித்து கூறவில்லை. ஆனால் ஐயா அவர்கள் வன்முறை வழியை நாடக் கூடியவர் அல்ல. முதல் நெறியாகவே  போரில்லா உலகம் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆதலால் வன்முறையின் வாயிலாக பொதுவுடைமை அடையவேண்டும் என்பது அய்யாவின் எண்ணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை....