சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது!
சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. போலீஸ்காரர்கள் தாக்குதலில் தான் இருவரும் இறந்தார்கள் என்று கருதுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது! உண்மையாக அப்படி நடந்திருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். போலீஸ்காரர்கள் சட்டவிரோதமாக மனிதநேயமே இல்லாமல் இப்படி நடந்து கொள்வது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் மரணம் போலீஸ் லாக்கப்பில் இருந்தபோது நடக்கவில்லை! சிறைக்குச் சென்ற பிறகு நடந்துள்ளது! ஆதலால் இறப்பிற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக குற்றவியல் மனுவாக வரிசைக்கு எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு மருத்துவ அறிக்கை கோரியுள்ளது. இதனிடையே காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு வெள்ளிக்கிழமைக்கு போடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடலாம். காவல் நிலைய மரணம், சிறைச்சாலை மரணம் குறித்து வழக்கு பதிவு செய்வது காவல் நிலைய வரம்புக்குள் வராது. உயர் நீதிமன்றம் அல்லது அரசு விச...