TAVAM (தவம்) என்ற தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்
அன்புமிக்க அன்பர்களே! நண்பர்களே! வணக்கம்! 'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?' என்று வினாவினான் மகாகவி பாரதி. ஆனால், நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ, மாற்றுவதற்கோ சக்தியற்று மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். அன்பு மற்றும் அற உணர்வுகளும், மனிதநேயமும் குறைந்ததால்தான் மேற்படியான அநீதிகள் நடக்கின்றன. தேடிச் சோறு நிதந்தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நாம் வீழ்ந்துகொண்டுள்ளோம். நமக்கு எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், சான்றோர்கள், பெரியோர்கள் எல்லாம் அன்பு வழியில் இன்பமாக வாழ நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பின்பற்றாமல் பலரும் தீய செயல்களைப் புரிவதால் சமூக அநீதிகள் நாளும் அறங்கேறிக்கொண்டுள்ளன. இருட்டு இருட்டு என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட ஒரு அகல்விளக்கை ஏற்றி வைப்...