1. அன்பு என்பது சுயநலமா? 'அன்பு என்று எதுவுமில்லை! அவனவன் சுயநலத்திற்கு தந்து கொண்டுள்ள பெயர்தான் அன்பு!' காமத்தை தணித்துக்கொள்ளும் சுயநலத்திற்குத்தான் காதல், கல்யாணம், குடும்பம், கணவன் மனைவி அன்பு எல்லாம்! கஷ்ட நேரத்தில் உதவி பெருவதற்குத்தான் நட்பு! என்று ஒரு நண்பர் சொன்னார். 'தாய்மை அன்பு கூட சுயநலந்தானா?' என்று வினா எழுப்பியபோது, 'வயோதிக காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றுதான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் சுயநலந்தான்!' என்றார் நண்பர். அந்த நண்பர் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மறுப்பீர்களா? ஏற்றுக்கொள்பவர்கள் என்ன சொல்வீர்கள்? ஒருவகையில் பார்த்தால் எல்லோரும் எதையாவது எதிர்பார்த்து, அல்லது எப்போதாவாது எதற்காவது பயன்படுவார் என்றுதான் யார்மீதும் அன்பு காட்டுகிறார்கள் என்பதால் அந்த நண்பரின் கூற்று சரிதான் என்று சொல்வீர்கள். மறுப்பவர் என்ன சொல்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு, எப்போதாவது பயன்படும் என்ற எண்ணத்தில் கொள்ளும் அன்பு உண்மையான அன்பல்ல! எதையும் எதிர்பாராமல் அன்பு காட்டுவது என்பது இல்லாமல் இல்லை! அதுதான் உண்மையான...
கருத்துகள்
கருத்துரையிடுக